"ஹேவிளம்பி" வருடத்தை கொண்டாட மலையக மக்கள் தயார்



(க.கிஷாந்தன்)

மேஷ ராசியில் கதிரவன் நுழைகின்ற தொடக்கமே தமிழ்ப் புத்தாண்டாகும். இதன் பிரகாரம் திருவள்ளுவர் ஆண்டு 2049, சித்திரைத் திங்கள் 1ம் நாள் வியாழக்கிழமை; ஆங்கிலமாதம் ஏப்பிரல் 13ம் (13.04.2017) திகதி பின் இரவு 00:48 மணிக்கு அபரபக்ஷ் திருத்தியை திதியில் விசாக நட்சத்திரத்திரம் 3ம் பாதத்தில் மங்களகரமான ”ஹேவிளம்பி வருஷம்” பிறப்பதாக வாக்கிய பஞ்சாங்கமும்; அன்றைய தினம் பின்னிரவு 02:02 மணிக்கு மங்களகரமான ஹேவிளம்பி் வருஷம் பிறப்பதாக திருக்கணித பஞ்சாங்கமும் கணித்துள்ளன.

சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசியில் பிரவேசிக்கும் வரை உள்ள காலப்பகுதியே ஓர் தமிழ் -வருஷமாகும்.

இந்த புத்தாண்டு 13.04.2017 அன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டை முன்னிட்டு 12.04.2017 அன்று அட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது. அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். இரவு பகலாக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.