நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை



பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களின் 4 பணிப்பாளர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ், சட்ட மாஅதிபரால் இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
30 மில்லியன் ரூபா பணத்தை முறையற்ற விதத்தில் பெற்றுக் கொண்டமை தொடர்பில் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 4 பணிப்பாளர்களுக்கும் எதிராக இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.