யாழில் புகையிரதத்துடன் மோதி 03 இராணுவ வீரர்கள் காயம்



(SUKANTHI)
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவேக புகையிரதத்துடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 3 இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர். 

யாழ்.சாவகச்சேரி பகுதியில் இன்று மதியம் 2.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்தில் இருந்து இருநுாறு மீற்றர் துாரத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தில் படுகாயமடைந்த இராணுவ சிப்பாய்கள் மூவரும் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.