நோன்பு மாதம் வரும் நிலையில் பேரீச்சம் பழ விலை அதி­க­ரிப்பு



முஸ்­லிம்­களின் நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம் பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­துள்­ளது.
இதன்­மூலம் நோன்பு பிடிக்கும் மக்­களின் ஊடாக வரு­மா­னத்தை ஈட்­டவே அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. எனவே இது தொடர்­பாக அர­சாங்­கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்­சர்கள் என்ன செய்யப் போகின்­றனர். முஸ்லிம் அமைச்­சர்கள் பதில் வழங்­கு­வார்­களா என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­நெத்தி கேள்வி எழுப்­பினார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை விசேட வியா­பார பண்டம் அற­வீட்டு சட்­டத்தின் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,
முஸ்­லிம்­களின் நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம் பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­துள்­ளது.
விசேட வியா­பார பண்டம் அற­வீட்டு மூலம் பேரீச்­ச­ம்ப­ழத்­திற்­கான வரி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. வெங்­காயம், உருளைக் கிழங்கு இறக்­கு­மதி உணவு வகையில் அதி­க­ரிப்­பதன் ஊடாக பயிர்ச்­செய்­கை­யா­ளர்கள் இலாபம் பெறு­வார்கள் என கூற­மு­டியும். எனினும் பேரீச்­ச­ம்பழ வரி அதி­க­ரிக்­கப்­ப­டு­கின்­றது என்றால் இங்கே பேரீச்சம் பழம் பயி­ரி­டப்­ப­டு­கின்­றதா? பேரீச்­ச­ம்பழ பயிர்­செய்­கை­யா­ளர்கள் இலங்­கையில் உள்­ள­னரா? இல்லை நோன்­பா­ளிகளை வைத்து அர­சாங்கம் தனக்கு இலாபம் ஈட்­டவே முயற்­சிக்­கி­றது. இது பெரும் அநியா­ய­மாகும்.
எனவே இது தொடர்­பாக அர­சாங்­கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்­சர்கள் என்ன செய்யப் போகின்­றனர். பெரி­தாக தம்மை முஸ்லிம் தலை­வர்கள் என அறி­மு­கப்­ப­டுத்­து­ப­வர்கள் என்ன பதில் வழங்க போகின்­றனர். முஸ்லிம் அமைச்­சர்கள் பதில் வழங்­கு­வார்­களா?
இந்த மாதம் முஸ்­லிம்­களின் நோன்பு ஆரம்­ப­மா­கின்­றது.
இதனை அறிந்தே இவ்­வ­ளவு காலம் அல்­லாமல் தற்­போது பேரீச்­சம்­பழ வரியை அர­சாங்கம் அதி­க­ரித்­துள்­ளது.
அத்­துடன் சீனா­வுடன் இம்­மாதம் சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தத்தை அர­சாங்கம் கைச்­சாத்­தி­ட­வுள்­ளது. இதனால் இலங்­கையின் உள்­நாட்டு உற்­பத்­தி­யா­ளர்கள் பெரு­ம­ளவில் பாதிக்­கப்­ப­டுவர்.
சீனர்கள் இலங்கை வந்தால் பீல்ட் மார்­ஷ­லினால் கூட ஒன்றும் செய்ய முடியாது.
தற்போது சீனர்கள் அமெரிக்காவை கூட ஆக்கிரமித்துள்ளனர். எனவே பெரிய சந்தையை கொண்ட நாடுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திட்டு அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது என கேள்வி எழுப்பினார்.