உலகின் முதலாவது லேசர் வெசாக் அலங்கார பந்தல்



உலகிலுள்ள முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்கார பந்தல் மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
கொழும்பு காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த அலங்கார பந்தல் புதன் கிழமை மாலை 7.00 மணிக்கு முதன் முறையாக காட்சிப்படுத்தப்படும்.
அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் வழிக்காட்டலுக்கமைவாக நிர்மாணிக்கப்படுகின்ற இந்த நவீன வெசாக் பந்தல் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் மக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்படும்.