பிரேமதாஸ அர்ப்பணித்தது மக்களுக்காகவே



பிரேமதாஸ அர்ப்பணித்தது மக்களுக்காகவே, அவர் துரதிஸ்ட வசமாக மரணித்தது மக்களுடன் இருக்கும் போதே என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. 

இதில் கலந்து கொண்ட போதே பிரதமர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, 

பிரேமதாஸ பிரதியமைச்சராக மற்றும் அமைச்சராக டட்லி சேனாநாயக்க காலத்தில் சேவையாற்றிய விதம் எமக்குத் தெரியும். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன பாரிய புரட்சி செய்யவும் அதிகாரத்தை பெற்றுக் கொள்ளவும் பிரேமதாஸ பல கடமைகளை நிறைவேற்றியுள்ளார். 

மக்களாலேயே பிரேமதாஸ ஜனாதிபதியாக ஆக்கப்பட்டார். அவர் அர்ப்பணித்தது மக்களுக்காகவே. அவர் துரதிஸ்ட வசமாக மரணித்தது மக்களுடன் இருக்கும் போதே, மக்கள் மதிக்கும் மே தினத்திலேயே அவர்து மரணமும் நிகழ்ந்தது. 

அவர் ஒருமுறை "பிரேமதாஸாவாகிய நான் ஜனாதிபதியானால் இலங்கையில் எந்தவொரு நபருக்கும் ஜனாதிபதியாக முடியும்" என குறிப்பிட்டார். 

தமிழராயினும் சிங்களவராயினும், பேகராயினும், முஸ்லிமாயினும் சகலருக்கும் அந்த சக்தி உள்ளது என அவர் கூறினார் என, ரணில் விக்ரமசிங்க இதன்போது உரையாற்றினார்.