இலங்கையில் கடந்த 1956ம் ஆண்டுகளில் இயங்கிய மேல் சபைக்கான (செனட் சபை) செங்கோலை வடிவமைத்த பிரபல பொற்கொல்லரான நைதேலாகே பியதிலக்க நேற்று பிற்பகல் காலமாகியுள்ளார்.
இறக்கும் போது 88 வயதில் இருந்த பியதிலக்க இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்திற்கு சென்று தான் வடிவமைத்த செங்கோலை மீண்டும் பார்த்து விட்டு சென்றார்.
அன்னாரின் உடல் தொமேமட ரம்புக்கனை என்ற முகவரியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளன.


Post a Comment
Post a Comment