இரட்டைக் குடியுரிமை அதிகாரிகள் குறித்தும் கவனம்



இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி, அரச அதிகாரிகள் குறித்தும் வருங்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என, பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

இதற்கமைய, இரட்டைக் குடியுரிமை கொண்ட அரச அதிகாரிகள் தொடர்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.