இயற்கையின் சீற்றத்தில் சிக்கிய பெண்ணொருவரை காப்பாற்ற முனைந்த விமானபடை சிப்பாய் உயிரிழந்துள்ளார்.
காலியில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட போது, ஹெலிகப்டரில் இருந்து கீழே வீழ்ந்த நிலையில் காயமடைந்த விமானபடை சிப்பாய் உயிரிழந்துள்ளார்.
வெள்ளத்தில் சிக்கியிருந்த பெண் ஒருவரை கேபிள் உதவியுடன் ஹெலிகப்டருக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட போது விமானபடை சிப்பாய் கீழே விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை விமான படையில் பணியாற்றும் வை.எம்.எஸ்.யாப்பாரத்ன என்ற 38 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துலிஎத்த என்ற தேயிலை தொழிற்சாலையில் சிக்கியிருந்த இரண்டு பெண்களில் ஒருவரை காப்பாற்றிவிட்டு மற்ற பெண்ணை காப்பாற்றுவதற்காக கேபிள் மூலம் கீழே இறங்கும் போதும் அவர் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்துள்ளார்.
பின்னர் வேறு விமான படை உறுப்பினரால் அவர் காப்பாற்றப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளா


Post a Comment
Post a Comment