கீதா குமாரசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் தகுதியில்லை என, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல நடிகையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இவர், சுவிஸர்லாந்து நாட்டின் பிரஜாவுரிமையை பெற்ற ஒருவராகும்.
இதற்கமைய, இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட கீதா குமாரசிங்க, அரசியல் அமைப்பின் அடிப்படையில் இலங்கை பாராளுமன்றில் அங்கம் வகிக்க முடியாது என, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையின் குறித்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment