#SAITAM: ஆர்ப்பாட்டத்தில் 90 மாணவர்கள் வைத்தியசாலையில்



பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். 

சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி போராட்டக்காரர்கள் நுழைய முற்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனால் பாதிக்கப்பட்ட 30 மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.