நீதிபதி மீதான சூடு,வவுனியா சட்டத்தரணிகளும் வெளிநடப்பு



யாழ் உயர் நீதிமன்ற நீதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்து வவுனியா நீதிமன்றத்தின் அனைத்து சட்டத்தரணிகளும் வெளிநடப்பு செய்து வாய்களில் கறுப்புத்துணிகளை கட்டி பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நடந்த தாக்குதல் சம்பந்தமாக பக்கசார்பற்ற முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும், நீதித்துறையில் யாரும் தலையிடுவதை சட்டத்தரணிகள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அனைத்து நீதிபதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இவ்வாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.