சிம்பாப்வே அணி, இலங்கையைப் பந்தாடி தொடரையும் வென்றது



இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை சிம்பாப்வே அணி 3 இற்கு 2 எனும் கணக்கில் கைப்பற்றியது.
ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்ற ஜந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியதன் மூலம் சிம்பாப்வே இந்த தொடர் வெற்றியை பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.
அந்த இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சிம்பாப்வே அணி 7 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் தொடர் ஒன்றை சிம்பாப்வே வெற்றிக் கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.