மட்டு. நகர் வாவிக்கரையில் சடலம்



மட்டக்களப்பு நகர் லோயிட்ஸ் அவனியூர் வீதிக்கு முன்னாலுள்ள வாவக்கரையில், ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு ​(18) 7.30 மணிக்கு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று, சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலத்தை மீட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம், அடையாளம் காணப்படாதலால், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது,