அட்டாளைச்சேனை பிரதேசத்தில் புதிதாக சமுர்த்தி பயனாளிகளாக இணைத்துக்கொள்ளப்பட்டோரின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் பிரதேச செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் DDD/HO/IT/11/BISM/02 ஆம் இலக்க 2017.07.12 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்துக்கு அமைவாகவே, இந்த புதிய பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
இது தொடர்பில், ஏதும் முறைப்பாடுகள் இருப்பின், பொதுமக்கள் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர், அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவில் அறிவிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


Post a Comment
Post a Comment