திருமலையில்,மைதானத்தை விரைவாக புனரமைக்க கோரி



திருகோணமலை, மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தை மிக விரைவில் புரனமைத்து தருமாறு கோரி கவனஈர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

திருகோணமலை, மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இன்று காலை 9.00மணி முதல் 10.30 வரையில் இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது. 

கடந்த 6 வருடங்களாக புரனமைப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தை மிக விரைவில் புரனமைத்து தருமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். 

பெருமளவான பிரதேச விளையாட்டு வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.