கிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம்



கிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. 

இன்று காலை குறித்த பகுதியில் சடலம் ஒன்று இருப்பது தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

குறித்த சடலம் காணப்படும் பகுதி பாழடைந்த கட்டட பகுதியாகும். 

அந்த பகுதியில் நச்சு மருந்து மணம் வீசுவதை அவதானிக்க முடிந்தது, குறித்த நபர் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.