பாசிக்குடா கடற்கரை சுத்தம்



தேசிய கடல் வளங்கள் பேணும் வாரத்தின் கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கல்மடு கடற்கரை சுத்தம் செய்யும் பணி வியாழக்கிழமை இடம்பெற்றது. 

வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கரையோரம் பேணல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறியிலாளர் எம்.துளசிதாசன், பாசிக்குடா சுற்றுலாத் துறை திணைக்கள முகாமையாளர் எம். மாஹீர், பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா, செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பாசிக்குடா சுற்றுலா விடுதிகளின் சங்க உறுப்பினர்கள், பாசிக்குடா தஹாம் ஹோட்டல் ஊழியர்கள், பொலிஸ் மற்றும் கடற்படை உத்தியோகத்தர்கள், கல்குடா வலைவாடி மீனவர் சங்கம், கல்மடு மீனவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.