விஷேட மேல் நீதிமன்றத்தை நிறுவ அனுமதி



அரசியலமைப்பின் 105(1) பிரிவுக்கு அமைய, விஷேட மேல் நீதிமன்றத்தை நிறுவ அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. 

பிரதம நீதியரசரால் பரிந்துரைக்கப்படும் மூன்று நீதிபதிகளை கொண்ட வகையில் இந்த நீதிமன்றம் இயங்கவுள்ளது. 

அரச சொத்துகள், நிதி மோசடிகள், ஊழல் மற்றும் முறைகேடுகள் உள்ளிட்ட வழக்குகளை துரிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.