தந்தங்களை வேட்டையாடிய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்



கல்கமுவ பிரதேசத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த "தல புட்டுவா" என்று அறியப்பட்ட யானையை கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் இன்று மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் 12ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

முன்னதாக நேற்று இரவு ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்