முன்பள்ளி ஆசிரியைகளுக்கான பயிற்சி நெறிக்கு விண்ணப்பங்கள்




ஊவா மாகாண கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற முன்பள்ளி ஆசிரியைகளுக்கான பயிற்சி நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஒரு வருட பயிற்சி நெறியை பூர்த்தி செய்த ஆசிரியைகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது இரண்டாவது தொகுதி முன்பள்ளி ஆசிரியைகளை பயிற்சி நெறியில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி நெறியைத் தொடர விரும்புகின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆர்வமுடையவர்கள் ஊவா மாகாண தமிழ் கல்வி அபிவிருத்தி பிரிவின் இடைநிலைக்கல்விக்கு பொறுப்பான பணிப்பாளர் வீ.கருணாகரன் மற்றும் பதுளை கோட்ட கல்வி காரியாலய ஆசிரிய ஆலோசகர் ஸ்ரீதேவி ஆகியோரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.