தேசிய தைப்பொங்கல் விழா.



பிரதமர் அலுவலகமும் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய தைப்பொங்கல் விழா, அலரி மாளிகையில் நேற்று (15) இடம்பெற்றது. இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், அமைச்சர் மனோ கணேசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோர் பங்குபற்றினர். (படங்கள்: பிரதீப் பத்திரண)