(க.கிஷாந்தன்)
பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30.01.2018 அன்று ஹட்டன் நகரில் கொட்டும் மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் ஹட்டன் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பிற்பகல் 2 மணியளவில் இலங்கை ஆசிரியர் சங்கம், மலையக ஆசிரியர் முன்னணி, ஆசிரியர் விடுதலை முன்னணி, இலங்கை கல்வி சமூக சம்மேளனம், இலங்கை ஐக்கிய தமிழர் ஆசிரியர் சங்கம் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியாறு ஆசிரியர்கள், அதிபர்கள், சிவில் சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டு சுமார் ஒரு மணித்தியாலயம் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இதன்போது, ஆசிரியர் சமூகத்தையும், அதிபர் சமூகத்தையும், கல்விச் சமூகத்தையும், பெண்கள் சமூகத்தையும் அவமானப்படுத்தியவர்கள் அனைவரையும் உடனடியாக பதவி நீக்கவும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.
Post a Comment
Post a Comment