ஒரு இலச்சம் ரூபா நன்கொடை



(அப்துல்சலாம் யாசீம் )

திருகோணமலை கோணேஸ்வரர் இந்து ஆலயத்தின் அபிவிருத்தி பணிக்காக வேண்டி கிழக்கு மாகாண ஆளுனரின் பாரியார் தீப்தி போகொல்லாகம  இன்று (29) ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஒரு இலச்சம் ரூபாய் நிதியினையும் வழங்கி வைத்தார்.

எதிர்காலத்தில் ஆசியாவின் தலை சிறந்த இந்து ஆலயமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள இவ்வாலயத்தினை தரிசிப்பதிலும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதிலும் தாம் அக்கறையாகவுள்ளதாகவும் தெரிவித்தார்.