அட்டாளைச்சேனையில்,அக்குப் பஞ்சர் சிகிச்சை




(பைசல் இஸமாயில்)
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் முதன் முதலாக அக்குப் பஞ்சர் சிகிச்சை முறை வைத்தியம் வைத்திய பொறுப்பதிகாரி கே.எம்.அஸ்லம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது மூட்டுவாதம், சீனி வியாதி, உடற்பருமன், ஒற்றைத்தலை வலி, கால் மற்றும் கை விறைப்புத் தன்மை, பாலியல் பலயீனம், மனச் சோர்வு, முடி உதிர்தல், முகப்பரு போன்ற நோய்களுக்கு இந்த சிகிச்சை வழங்கி வைக்கப்பட்டன.
இந்த சிகிச்சையை வைத்திய பொறுப்பதிகாரி கே.எம்.அஸ்லம் மற்றும் வைத்தியர்களான பர்வீன் முகைடீன், பஸ்மினா அறூஸ் ஆகியோர்களினால் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது