மாத்தறையில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றினுள், ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில சந்தியில் வைத்து நுழைந்த நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தங்காலை நீதிமன்றத்தில் இடம்பெற்ற கொலை வழக்கு ஒன்றிற்காக சென்ற வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மிரிஜ்ஜவில சந்தியில் பேருந்தில் ஏறி 3 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்த பின்னர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதுடைய எஸ்.எச் சந்தன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக ஹம்பந்தோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் துப்பாக்கிச்சூட்டை மேற்கொள்ள இருவர் பேருந்தினுள் ஏறியுள்ளதாகவும் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டதன் பின்னர் பின்னால் வந்த மோட்டர் வாகனம் ஒன்றில் ஏறி தப்பிச் சென்றதாகவும் பேருந்தின் சாரதி தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தங்காலை நீதிமன்றத்தில் இடம்பெற்ற கொலை வழக்கு ஒன்றிற்காக சென்ற வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மிரிஜ்ஜவில சந்தியில் பேருந்தில் ஏறி 3 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்த பின்னர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதுடைய எஸ்.எச் சந்தன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக ஹம்பந்தோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் துப்பாக்கிச்சூட்டை மேற்கொள்ள இருவர் பேருந்தினுள் ஏறியுள்ளதாகவும் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டதன் பின்னர் பின்னால் வந்த மோட்டர் வாகனம் ஒன்றில் ஏறி தப்பிச் சென்றதாகவும் பேருந்தின் சாரதி தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment