திரு­டர்­களைப் பாது­காத்­த­மை­யின் கார­ண­மா­கவே மக்­கள் சிறந்த பாடத்தை அர­சுக்­குப் புகட்­டி­னர்



திரு­டர்­களைப் பாது­காத்­த­மை­யின் கார­ண­மா­கவே மக்­கள் சிறந்த பாடத்தை அர­சுக்­குப் புகட்­டி­னர். திரு­டர்­க­ளு­டன் ஆட்சி அமைக்க ஒன்று சேர்ந்­தால் மேலும் பெரிய பாடத்தை மக்­கள் அர­சுக்­குப் புகட்­டு­வர் என்று முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­ நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்­தார்.
காலஞ்­சென்ற பிர­பல நடி­க­ரும் அர­சி­யல்­வா­தி­யு­மான விஜய குமா­ர­துங்­க­வின் நினைவு தினத்தை முன்­னிட்டுக் கட்­டு­நா­யக்­க­வில் உள்ள அவ­ரின் சமா­திக்கு அஞ்­சலி செலுத்­திய பின்­னர் செய்­தி­யா­ளர்­கள் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கும் போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
‘உங்­க­ளது மகனை அர­சி­ய­லில் கள­மி­றக்­கு­வீர்­களா?’ என்று எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு, என்­னு­டைய மகனை அர­சி­ய­லுக்குக் கள­மி­றக்­கித்­தான் மக்­க­ளுக்­குச் சேவை செய்ய வேண்­டும் என்­பது இல்லை. நான் குடும்ப அர­சி­யலைச் செய்ய வேண்­டி­ய­தில்லை. மாமா, தம்பி, அண்ணா, தங்கை ஆகி­யோரை அர­சி­ய­லுக்கு அழைத்து வர வேண்­டி­ய­தில்லை. கொள்ளை அடிக்க வரு­ப­வர்­களே குடும்­பத்­து­டன் அர­சி­ய­லுக்கு வரு­கின்­ற­னர். தற்­போது ஒரு சிலர் அப்­படி செய்து வரு­கின்­ற­னர் என்று பதில் வழங்­கி­னார்.
‘தேர்­தல் முடி­வு­கள் தொடர்­பில் என்ன கூற­ வி­ரும்­பு­கின்­றீர்­கள்?’ என்று எழுப்­பப்­பட்ட மற்­றொரு கேள்­விக்கு, திரு­டர்­களைப் பாது­காத்­த­மை­யின் கார­ண­மா­கவே மக்­கள் சிறந்த பாடத்தை அர­சுக்­குப் புகட்­டி­னர். இந்த நிலை­யில் திரு­டர்­க­ளு­டன் ஆட்சி அமைக்க ஒன்று சேர்ந்­தால் பெரிய பாடத்தை மக்­கள் புகட்­டு­வர் -– என்­றார்.

Post a Comment

[facebook][blogger]

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.