இலத்திரனியல் வாக்கெடுப்பு முறை நடத்தாதிருக்க



பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது இலத்திரனியல் வாக்கெடுப்பு முறை நடத்தாதிருக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இதனைக் கூறியுள்ளார். 

இன்று காலை கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் சபாநாயகர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

அதன்படி இதன்போது திறந்த அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது