அக்கரைப்பற்று பிரதேச செயலர் சீனா விஜயம்



-எஸ்.எம்.அறூஸ்-
சீனா - பீஜிங் நகரில் இடம்பெறுகின்ற  பொது நிருவாகம் மற்றும் அபிவிருத்தி எனும் கருப்பொருளை மையப்படுத்தி  நிருவாக அதிகாரிகளுக்கு நடாத்தப்படுகின்ற சர்வதேச பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்வதற்காக, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்..

எதிர்வரும் ஜூன் 03 ஆம் திகதி பயணமாகி சுமார் 21 நாட்கள் சீனாவின் தலைநகரான பீஜிங் நகரில் இடம்பெறுகின்ற பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதற்காக இலங்கையைச் சேர்ந்த இரண்டு அரசாங்க அதிபர்கள், இரண்டு பிரதேசசெயலாளர்கள் மற்றும் ஒரு பிரதம பொறியியலாளர் என ஐந்து பேரைக்கொண்ட குழுவில் ஒருவராகவே ஏ.எம். அப்துல் லத்தீப் பயணமாகின்றார்.