ஊடகவியலாளர்கள் சங்கத்தின் நிர்வாகத்தெரிவு



`
(அப்துல்சலாம் யாசீம் )

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம்  தலைவர் மங்கலனாத்லியனாராய்ச்சி தலைமையில் இன்று (13) ரிங்கோ விடுதியில் நடைபெற்றது.

இதில்  தலைவராக அரசரெத்தினம் அச்சுதன் (வீரகேசரி)
ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

செயலாளராக ஆர்.ஜி.தர்மதாஷ (பீபீசீ)
பொருளாளராக ஏ.ஜே.எம்.சாலிஹ் (சுடர்ஔி)
மற்றும் உப தலைவராக சிரேஸ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.ரபாய்தீன் (தினகரன்) கனிஷ்ட  உட தலைவராக சுகத் விஜேகுமார (திவயின)  உப தலைவராக பீ.லோஜினி (தினக்குரல்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.


அத்துடன் உறுப்பினர்களாக ஜீ.நிக்கிதொம்ஷன் (டான் டீவி) வீ.ராஜ்குமார் (தினக்குரல்) பீ.சற்சிவானந்தம் (வீரகேசரி)  ஓ.கியாஸ் ஷாபி (தினகரன்)  ஜே.எம்.இஸ்மத் (நவமணி)  சமன் மல்லவராச்சி (திவயின)  டீ.விஜயபால (லங்காதீப) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.