2,000 புதிய பஸ்கள் சேவையில்



2,000 புதிய  பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம்
செலுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக
 போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க
 தெரிவித்தார்.
பொது மக்களுக்கு சிறப்பான போக்குவரத்துச் சேவையை வழங்குவதே அரசாங்கத்தின்
 நோக்கமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் நிதியை பயன்படுத்தாது அதற்கு தேவாயன நடவடிக்கையை
மேற்கொள்வதே
தமது நோக்கமாகும் எனவும் அவர் கூறினார்.

பஸ்களுக்கு 500 சி.சி இயந்திரங்களை (என்ஜின்) பொருத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி அமைச்சர் மேலும்  தெரிவித்தார்.