அக்கரைப்பற்று அமினுத்தீன், முன்பள்ளி பாடசாலை பணியகத்தின் தவிசாளராக




(அப்துல்சலாம் யாசீம் )

கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலை பணியகத்தின் தவிசாளராக எம்.ஏ.அமீர்தீன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால்  (08 வௌ்ளிக்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று.முதலியார் வீதியைச் சேர்ந்த எம்.ஏ.அமினுத்தீன் சமாதான நீதவானாகவும் அம்பாறை மாவட்ட வேலை பணியாற்றல் அதிகாரியாகும்,கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து சபையின் பணிப்பாளராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நியமனத்தின் போது கிழக்கு ஆளுநர் கூறுகையில், மூன்று இன சமூகத்திற்கும் எந்தவிதமான பாரபட்சமும் இன்றி கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக பாடசாலைகளுடனும்.பெற்றோர்களுடனும் இணைந்து கல்வித் தரத்தை முன்னேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.