மாத்தறை துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் சார்ஜன்ட் பலி



மாத்தறையில், தங்க ஆபரணங்கள் கடையில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளை கோஷ்டியினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மரணமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகங்களில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கெப் ரக வாகனமொன்றில் வருகைதந்த ஒன்பது பேரடங்கிய கொள்ளை கோஷ்டியினரே, அந்த நகைகடையை கொள்ளையடிப்பதற்கு இன்றுகாலை வந்துள்ளனர்.
அதன்போதே, பொலிஸாருக்கும் ​கொள்ளை கோஷ்டியினருக்கும் இடையில் பரஸ்பரம் துப்பாக்கிப்ப பிரயோகம் ​ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் ​ பொலிஸார் மூவரும், பொதுமகனும் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.