(Breaking) காத்தான்குடி நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு,ஒருவர் உயிரிழப்பு



(விஷேட நிருபர்)
காத்தான்குடி-6, அலியார் சந்தியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் வபாத்தாகியுள்ளார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
பலணிபாவா என அழைக்கப்படும் 73 வயதுடைய ஆதம்பாவா முகம்மட் இஸ்மாயில் என்பவரே ஸ்தளத்தில் வபாத்தாகியுள்ளார்.
துப்பாக்கிச் சூடை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் அங்கு பொலிசார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.