U Turn எடுத்தார், மனுஷ நாணயக்கார




#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
தென்னிலங்கை, காலியைப் பிறப்பிடமாகக் கொண்ட,முன்னாள் தொலைக் காட்சித் தொகுப்பாளரானவர் மனுஷ நாணயக்கார.2010ம் ஆண்டு, காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஐ.தே.க சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்தார்.பின்னர் பொ.ஜ.ஐ.மு அரசுக்கு தாவி 18 வது அரசியல் அமைப்புக்கு ஆதரவு நல்கியதுடன், முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க வெளியேற்றுகின்ற நம்பிக்கையில்லாப் பிரேரணனைக்கு ஆதரவு நல்கியவர் .


பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தனது பிரதியமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். 

தனது பதவியை இராஜினாமா செய்த மனுஷ நாணயக்கார அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். 

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சராக மனுஷ நாணயக்கார அண்மையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.