"ரத்தரங்" விலகினார்




"ரத்தரங்´ எனப்படும் கிரிஷாந்த புஷ்பகுமார தென் மாகாண சபை உறுப்பினரும் பதவியில் இருந்தும் அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். 

தென் மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார, பெப்ரவரி 28 ஆம் திகதி அக்மீமன பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதை அடுத்து கைது செய்யப்பட்டார். 

16 வயது பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

குறித்த பாலியல் துஷ்பிரயோகம் பெப்ரவரி 26 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கிரிசாந்த புஷ்பகுமார அக்மீமன நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது