டிசம்பரில்,மீறிகம - குருநாகல் நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் நிறைவு


மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீறிகம தொடக்கம் குருநாகல் வரையிலான வீதியின் நிர்மாணப் பணிகள் டிசம்பர் மாத்தில் நிறைவடைய உள்ளது. 

இதற்கான திட்டத்தில் இது வரையில் 75 சதவீதமான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக வீ.மோஹான் தெரிவித்துள்ளார். 

இந்த வீதியின் நீளம் 40 கிலோ மீற்றர்களாகும். இதில் 5 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனூடாக மேலும் பல நகரங்களுக்கு பிரவேசிக்க முடியம். 

இந்த திட்டத்திற்காக அரசாங்கம் 80 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய உள்ளது. இதற்கமைவாக குருநாகலில் இருந்து தம்புள்ளை வரையிலான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளது. 

இந்த வீதியின் நிர்மாணப் பணிகளின் பின்னர் கொழும்பு கண்டி வீதியில் பஸ்யால ஊடாக மீறிகமவிற்கு வரும் வாகனங்களுக்கு குருநாகல் நகரத்திற்கு செல்லாது தம்புள்ளை நகரத்திற்கு செல்வதற்கான சந்தர்ப்பம் கிட்டுகின்றது. 

இதேவேளை, கொழும்பு - கண்டி வீதியை விரிவுப்படுத்தும் பணிகள் தற்பொழுது யக்கல வரையில் இடம்பெற்றுள்ளது. 

குறுகிய காலத்திகுள் பஸ்யால வரையில் இந்த வீதி 4 நிரல்களாக விரிவுப்படுத்தப்படவுள்ளது. பஸ்யாலவில் இருந்து மீறிகம வரையிலான வீதி தற்பொழுது விரிவுப்படுத்தப்படவுள்ளதாகவும் திட்டப்ப பணிப்பாளர் வீ.மோஹான் தெரிவித்துள்ளார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)