சுகயீன விடுமுறை போராட்டம்


இன்றும் (18) நாளையும் (19) சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் ஈ.எம்.ஜே.எஸ். டி சேரம் தெரிவித்துள்ளார். 

எனினும் 27 அமைப்புகள் குறித்த சுகயீன விடுமுறை பேராட்டத்தில் பங்கு கொள்ள மாட்டோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டேலின் தெரிவித்துள்ளார்.