நான்கு விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடுமாற்றம்


உலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்று சனிக்கிழமை நடக்கும் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன. 

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. 

6 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை என்று 13 புள்ளியுடன் பட்டியலில் 2-வது இடம் வகிக்கும் இந்திய அணி ஏற்கனவே அரையிறுதி போட்டிக்கு முன்னேறி விட்டது. 

அதே சமயம் 3 வெற்றி, 3 தோல்வி, 2 முடிவில்லை என்று 8 புள்ளியுடன் உள்ள இலங்கை அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 ஓவர்கள் முடிவில் இலங்கை 100 ரன்களை எட்டியுள்ளது.