சாலிந்த திசாநாயக்கவின் இடத்துக்கு ஹேரத்


குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்கவின் மறைவின் பின்னர், அந்த மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த வெற்றிடத்துக்கு எச்.எம்.டி.பி. ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான வர்த்தமானி வெளியாகியுள்ளது.
முன்னதாக, இந்த வெற்றிடத்திற்காக தான் நியமிக்கப்பட்ட வேண்டும் என்பதற்காக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை ஷாந்த பண்டார இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.