ஆசிரியர் நியமனம்


கல்வித் துறையின் சிறந்த முன்னேற்றத்தை கருத்திற் கொண்டு ஆசிரியர்கள் தொடர்ச்சியாக தங்களது அறிவை இற்றைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கெக்கிராவ மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று (09) முற்பகல் இடம்பெற்ற வடமத்திய மாகாண பட்டதாரி ஆசியர்கள் நியமன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அறிவு மற்றும் மாறிவரும் உலகிற்கேற்ற ஆக்கத்திறன்களை கொண்டவர்களாக எதிர்கால தலைமுறையை உருவாக்குவதைப் போன்று நவீன தொழிநுட்பத்துடன் முன்னோக்கி செல்லக்கூடிய மாணவர்களின் ஆன்மீக துறையையும் வளர்த்து, சிறந்ததோர் தலைமுறையை கட்டியெழுப்புவது ஆசிரியர்களின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வடமத்திய மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 428 சிங்கள மொழி மூலமான ஆசிரியர்கள், 100 தமிழ் மொழி மூலமான ஆசிரியர்கள், 11 ஆங்கில மொழி மூலமான ஆசிரியர்கள் உள்ளிட்ட 539 பேர்களுக்கு இதன்போது ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.