திருமணம் செய்தது தவறான முடிவு - ரேவதி


30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேவதி. மண் வாசனை படம் மூலம் அறிமுகமான இவர், நடிப்பில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டார். விவகாரத்துக்கு பின் மீண்டும் நடிக்க வந்த ரேவதி தொடர்ந்து நடித்து வருகிறார்.

தனது திருமணம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’நான் பிளஸ் டூ முடிச்சிருந்த நேரம். என்னை பற்றி தெரிஞ்சுக்கிட்ட பாரதிராஜா அங்கிள், 'மண்வாசனை' படத்தில் என்னை நடிக்கக் கேட்டார். அந்த 16 வயசுல, 'நான் நடிகையா?'ன்னு மிரண்டுபோய் 'அதெல்லாம் வேண்டாம்'னு சொன்னேன். என் மாமாதான் என்னை கன்வின்ஸ் பண்ணினார்.

நடிகை ரேவதி

'எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாது'ன்னு பாரதிராஜா அங்கிள்கிட்ட சொல்ல, 'ரொம்ப நல்லதா போச்சு. உன்னை நடிக்க வைக்கிறது என் பொறுப்பு'ன்னு சொன்னார். பாரதி அங்கிள் சொல்லிக்கொடுக்கிறதை உன்னிப்பா கவனிச்சு, அப்படியே நடிச்சேன்...

என் வாழ்க்கையில நான் எடுத்த தவறான சில முடிவுகளில் முக்கியமானது, என் திருமணம். அப்போ கொஞ்சம் நிதானமாக முடிவு எடுத்திருந்தால், என் சினிமா பாதை வேறு மாதிரி மாறியிருக்கும். இன்னும்கூட நிறைய நல்ல படங்கள்ல நடிச்சிருப்பேன். தியேட்டர் நாடகங்கள்ல கொஞ்சம் காலம் நடிச்சேன். இப்போ சில ஆண்டுகளாகத்தான் மீண்டும் நல்ல ரோல்கள் வர ஆரம்பிச்சிருக்கு. ஆக்டிவ்வா நடிக்கிறேன். காலம் நம்மை எப்படி எல்லாம் இயக்குதுன்னு பார்ப்போம்’. இவ்வாறு ரேவதி கூறியுள்ளார்.
Related Tags :