வெடிப்பொருட்களுடன் பெண்கள் கைது


கிளிநொச்சியில் பெருந்தொகை வெடிப்பொருட்களுடன் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீட்டிலிருந்தே இந்த வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் மனைவி மற்றும் சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்து கைக்குண்டுகள், சீ4 ரக வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது