அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாவட்டத்தில் முதலாமிடம்


(க.கிஷாந்தன்)
வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவன், பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
அட்டன் – டிக்கோயா பகுதியை வசிப்பிடமாகவும், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் ராம் பிரசாத் என்ற மாணவனே 3ஏ என்ற பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா  மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார்.
இவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும்  ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.
மேலும், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவன், உயிரியல் விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
அட்டன் நகர் பகுதியை வசிப்பிடமாகவும், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் ஸ்ரீ மதுஷான் என்ற மாணவனே 3ஏ என்ற பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா  மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார்.
அத்தோடு, அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவி, நுண்கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
தலவாக்கலை பகுதியை வசிப்பிடமாகவும், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் ஆர்.கபிஷா என்ற மாணவியே 3ஏ என்ற பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா  மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார்.
மேலும், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவி, தொழில்நுட்ப பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
வட்டவளை பகுதியை வசிப்பிடமாகவும், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் எம்.மெரினா என்ற மாணவியே 3ஏ என்ற பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா  மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார்.
இம்முறை இந்த கல்லூரியில் இருந்து 130 மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ளமை சிறப்பம்சமாகும் என கல்லுரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.