சாம்பியா: 20 லட்சம் மக்களுக்கு உணவில்லை


காலநிலை மாற்றங்களின் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் கடுமையான வறட்சி நிலவுகிறது.
உலக சராசரியைவிட தென் ஆப்பிரிக்க பகுதிகளில் வெப்பநிலை இரு மடங்கு அதிகம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால், அங்கு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 20 லட்சம் மக்கள் உணவு இல்லாமல் தவிக்கின்றனர்.
அதனால், பெண்கள், இலைகள் மற்றும் வேர்களை தேடி உணவை சேகரிக்கின்றனர்.