இலங்கை அணி,இந்தியா பயணம்


இந்திய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு - 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணியினர் இன்று காலை இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளனர்.
அதன்படி இலங்கை அணிக் குழாமினர் இன்று காலை 7.20 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னை விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டனர்.
இந்­தி­யா­வுக்கு எதி­ரான மூன்று போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு - 20 தொடரின் முதல் போட்டி எதிர்­வரும் 5 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ளது. 
இதற்­காக 16 பேர் கொண்ட இலங்கை அணி அறி­விக்­கப்­பட்­டது. 
பல்­வேறு காயங்கள், போதிய உடற்­த­கு­தி­யின்மை கார­ண­மாக விலகி­யி­ருந்த சக­ல­துறை ஆட்­டக்­கா­ரரும் முன்னாள் தலை­வ­ரு­மான அஞ்­சலோ மெத்தியூஸ் 18 மாதங்­க­ளுக்குப் பிறகு இரு­ப­துக்கு-20 அணிக்கு உள்­வாங்­கப்­பட்­டுள்ளார்.