கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை வேளையில் அவரை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இருந்து மேல்மாகாண குற்றதடுப்பு காவல்துறை பிரிவினரினால் பெற்றுக் கொள்ளப்பட்ட சோதனை உத்தரவின் பிரகாரம் நேற்று மாலை ரஞ்சன் ராமநாயக்கவின் இல்லத்தில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இருந்து முறையான அனுமதி இல்லாத துப்பாக்கி ஒன்றும், அதற்கு பயன்படுத்தப்படும் 127 தோட்டாக்களும் ஆவணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டிருந்தன.
இதனை அடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக மேல்மாகாண குற்றதடுப்பு காவல்துறை பிரிவினரினால் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment