அக்கரைப்பற்றில்,கல்லுாரி மாணவியைக் கவர்ந்து சென்றவருக்கு விளக்கமறியல்


#S.T.Jamaaldeen.
குறித்த சம்பவமானது கடந்த 4ம் திகதியன்று அக்கரைப்பற்று பொலிஸ்  பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.   14 வயது நிரம்பிய மாணவி ஒருவர், பெற்றோரின் சம்மத்தினை மீறி, தனது காதலனின் துாண்டுதலின் பேரில், இரவு  நேரத்தில், வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதன் பின்னர் இருவரும் கடற்ரையில் இரவு நேரத்தில் கதைத்துக் கொண்டிருந்துள்ளார்கள். பிள்ளையக் காணவில்லை என்று தேடி அலைந்த பெறறோரர் அக்கரைப்பற்று பொலிசாருக்கு புகாரிட்டுள்ளனர். அதிகாலை 3.30 மணியளவில், அட்டாளைச் சேனை மீனோடைக் கட்டுப் பிரதேசததில் தமது பிள்ளை இருப்பதாககவும் குறித்த பிள்ளையினை அழைத்துச் செல்லுமாறும், அனாமோதய தொலைபேசி அழைப்புக கிடைக்கப் பெற்றுள்ளது.பின்பு குறித்த இடத்துக்குச் சென்று தமது பிள்ளையை மீட்டு வந்துள்ளனர் வந்துள்ளனர்.

குறித்த பெண் பிள்ளையானவனர் மருத்துவப் பரிசோதனைக்களுக்கென அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமிதிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புற்ற சந்தேக நபரை அக்கரைப்பற்று பொலிசார் இன்றைய தினம் அக்கரைப்பற்றுபதில் நீதிபதி இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான் முன்னிலையில் ஆஜர் படுத்தி, இது தொடர்பான மேலதிக விசாரணைகள், மருத்துவ அறிக்கைகளைப் பெற வேண்டியு்ள்ள காரணத்தினால்,குறித்த சந்தேக நபரை 14 நாட்கள் வரை விளக்க மறியலில் வைக்குமாறு வேண்டியிருந்தனர். சந்தேக நபரின் சார்பில். சட்டத்தரணிகள் ஜெனீர்,றிஸ்வான போன்றோர் ஆஜராகினர்.

குறித்த சந்தேக நபரை, எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று அக்கரைப்பற்றுப் பதில் நீதிபதி இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான் உத்தரவிட்டார்.