மைத்திரியின் மகன், ஊரடங்கு நேரத்தில் களியாட்டம்


கொழும்பில் உள்ள கேம்பிறிஜ் பிளேசில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் மகன் நள்ளிரவைத் தாண்டி அதிகாலை 2.30 வரை கேளிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.


ஊரடங்கை மீறிச் செயற்பட்ட தஹம் சிறிசேனவிற்கு எதிராக  எந்த வித சட்ட நடவடிக்கையும் இலங்கைப் பொலிசார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இது தொடர்பாக சிரேஸ்ட ஊடகவியலாளர் நாமினி விஜயதாச பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவிற்கு தான் அறிவித்தும் அவர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வில்லை என்பதாக சிரேஸ்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.