இலங்கை கைதிகள் பிணையில் விடுதலை



 

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்த குழுவின் பரிந்துரைப்படி மார்ச் 17 முதல் ஏப்ரல் 4 வரை 2691 கைதிைள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நிலவும் சுகாதார நிலைமை இதில் கருத்தில் கொல்லப்பட்டுள்ளது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
அபராதம் செலுத்த முடியாதவர்கள், பிணை நிபந்தனையை நிறைவேற்றாதவர்கள், சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்கள், விசாரணைக் கைதிகள் ஆகியோர் இதில் அடக்கம்.
இலங்கை சிறைகளில் 10,000 பேர் மட்டுமே அடைக்க வசதி உள்ள நிலையில் 20,000க்கும் அதிகமானவர்கள் உள்ளனர்.